ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :834


திருக்குறள் -சிறப்புரை :834
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல். --- ௮௩௪
நல்ல நூல்களைக்கற்றும் அவற்றின் உட்பொருளை உணர்ந்தும் அவற்றைப் பிறர்க்கு எடுத்துரைத்தும் அவ்வழியில் தான் அடங்கி ஒழுகாத பேதையைப்போல் பேதையர் உலகில் இல்லை.
“கனம் பொதிந்த நூல் விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம் புரிந்தவாறே மிகும்.” –நாலடியார்.
மிகுந்த மேன்மை நிறைந்த நூல்களை அவற்றின் நுண்பொருள் விளங்குமாறு எடுத்துரைத்தாலும் கீழ்மைக் குணம் உடையவன் தன் மனம் விரும்பியவாறே செல்வான்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக