வெள்ளி, 20 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :852


திருக்குறள் -சிறப்புரை :852
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.--- ௮௫௨
ஒருவன் தன்னுடன் ஒன்றுபடாமை கருதி  அன்பற்ற செயலைச் செய்தாலும் வெறுப்பினால் அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் உயர்ந்த பண்பாம்.
“ தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று…” –கலித்தொகை.
தமக்கு இனிதாக இருக்கின்றது என்று கருதிப் பிறருக்கு இன்னாதவற்றை வலிந்து செய்வது நன்றாகுமோ..?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக