சனி, 21 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :853


திருக்குறள் -சிறப்புரை :853
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.---- ௮௫௩
(தவல் இல்லா –அழிவு இல்லாத; தாவில் – கெடுதல் இல்லாத)
வெறுப்பு என்னும் துன்பம் தரும் கொடிய நோயினை ஒருவன் தன் மனத்தினின்று முற்றாக நீக்கிவிடுவானாகில் அது அவனுக்கு எக்காலத்தும் கெடுதல் இல்லாத புகழினைத்
தரும்.
“ கருத்து ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்
பொறுத்து ஆற்றிச் செறல் புகழ்..”---பழமொழி.
தமக்குத் தீமை செய்தாரையும் பொறுத்து அவருக்கு நன்மை செய்தல் புகழுக்கு உரிய செயலாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக