செவ்வாய், 3 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :836


திருக்குறள் -சிறப்புரை :836
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.--- ௮௩௬
பேதையானவன் செய்யும் முறை அறியாது ஒரு செயலைச் செய்வானாயின் அச்செயல் கெடுவதோடு தானும் விலங்கிடப்படுவான்.
“ எய்திய செல்வத்தராயினும் கீழ்களைச்
 செய் தொழிலாற் காணப்படும்.” ----நாலடியார்.
பெருஞ் செல்வத்தைப் பெற்றவர்களாயினும் அவர்கள் செய்யும் தொழிலால் இவர்கள் கீழ்மக்களே என்று அறிதல் கூடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக