புதன், 4 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :837


திருக்குறள் -சிறப்புரை :837
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்ற கடை.--- ௮௩௭
பேதையானவன் நல் ஊழால் பெருஞ்செல்வம் பெற்றானாயின் முன்பின் தொடர்பில்லாத அயலார் நிறைய நன்மை பெறுவர் ; சுற்றத்தினரோ பசியால் வருந்திக்கிடப்பர்.
“ ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவர் புல்லறிவினார்..”—நாலடியார்.
அறிவற்றவர்கள் செல்வத்திலே மயங்கித் தம் வாழ்நாளை வீணாகக் கழிப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக