புதன், 18 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :850


திருக்குறள் -சிறப்புரை :850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.--- ௮௫0
உலகத்தார் உண்மையெனக் கண்டறிந்து கூறுவனவற்றை யெல்லாம் புல்லறிவாளன் இல்லை என்று மறுத்துக் கூறுவான் ; அவன் இவ்வுலகத்தில் மனித வடிவில் திரியும் பேய் என இகழப்படுவான்.
“ அருளின் அறம் உரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர் – பொருள் அல்லா
ஏழை அதனை இகழ்ந்து உரைக்கும் பால்கூழை
மூழை சுவை உணராது ஆங்கு.” –நாலடியார்.
அருளின் அறம் உரைக்கும் அன்புடையார்தம் வாய்ச் சொற்களை அறிவுடையோர் ஏற்றுப் போற்றுவர் ;அறிவற்ற மூடனோ பால் சோற்றின் சுவையை உணராத துடுப்பைப் போலப் பெரியோர் வாய்ச் சொற்களை இகழ்ந்து பேசுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக