வெள்ளி, 6 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :839


திருக்குறள் -சிறப்புரை :839
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன்று இல்.--- ௮௩௯
(பெரிது இனிது ; தருவது ஒன்று)
அறிவற்றவரோடு கொள்ளும் நட்பு மிகவும் இனிது ஏனெனில் பிரிய நேரும் காலத்து அஃது ஒரு துன்பமும் தருவதில்லை.
“அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்”—கலித்தொகை.
அறிவு எனப்படுவது அறியாதார் கூறும் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக