ஞாயிறு, 5 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் -106


தன்னேரிலாத தமிழ் -106

இம்மை அடக்கத்தைச் செய்து புகழ் ஆக்கி
உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் மெய்மையே
பட்டாங்கு அறம் உரைக்கும் பண்புடையாளரே
நட்டார் எனப்படுவார்.” ---அறநெறிச்சாரம்.

 இப்பிறவியில் மன,மொழி, மெய்களால் அடங்கும்படிச் செய்து, பெருமை தரும் புகழினைப் பெருக்கி, மறுபிறப்பில் வீடு பேற்றினை அடையும்படிச் செய்வதால் நீதிநூல்களில் உள்ளபடி உண்மை அறத்தினை எடுத்துக்கூறும் குணம் உடையவர்களே உண்மையான நட்பினர் ஆகும் தகுதி உடையவர்.

1 கருத்து: