செவ்வாய், 7 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –340.

 

தன்னேரிலாத தமிழ் –340.

அறிவுடையார்  ஆவது அறிவார்  அறிவிலார்

அஃதுஅறி கல்லா தவர். –குறள், 427.

 

 ‘புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட

போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்

அறிஞர்தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு

செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிக்

குறுகிய செயல்கள் தீர்த்துக் குவலயம் ஓங்கச் செய்வாய்

நறுமண இதழ்ப் பெண்ணே உன் நலம் காணார் ஞாலம் காணார் (புதிய)

 

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க

புதுக்கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம் வந்தாலும்

அதற்கொப்ப வேண்டாமே நம்தமிழர் மேன்மை

அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால்

எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை

ஏற்ற செயல் செய்தற்கும் ஏன் அஞ்ச வேண்டும்.”

---புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், படம்: சந்திரோதயம்,1966.

2 கருத்துகள்: