புதன், 16 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-16.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-16.

முனைவர் இரெ. குமரன்

களப்பாள் ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.

               பிற்காலச் சோழப்பேரரசு எழுச்சியுடன் தோன்றுவதற்கு வித்திட்ட ஆதித்தசோழனின் வரலாறு, களப்பாள் ஆதித்தேச்சுரம் கோயிலுடன் தொடர்புடையதை அறிதற்குக் கீழ்க்காணும் செய்திகள் துணைபுரிகின்றன.

 

                            ஆதித்த சோழன் (பொ.ஊ. 871–907),

                                      கோப்பரகேசரி விசயாலய சோழனின் மகன். இவனும் தன் தந்தையுடன் திருப்புறம்பியபோரில் பங்குபற்றினான். பல்லவ மன்னன் அபராசித வர்மனைக் கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது.

 

                  மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான் ஆதித்தன் என்று சுந்தர சோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதித்தன் காலத்தில் மண்டளிகள் பல கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன என்றும் இவன் காலத்தில் சுமார் 50 கோயில்கள் வரை கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது. (விக்கிபீடியா)

…………………………………………தொடரும்……………………………………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக