புதன், 22 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…14.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…14.

ஒளவையார் அருளிய மூதுரை.

 

இளமையில் வறுமை

“இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்

இன்னா அளவில் இனியவும் – இன்னாத

நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே

ஆளில்லா மங்கைக் கழகு.”

                   காலமல்லாத காலத்தில் பூத்த மலரும் கணவன் இல்லாத பெண்ணின் அழகும் பயன்படாவாம். அவைபோல, இளமையில் வறுமையும் முதுமையிற் செல்வமும் பயன்படாவாம் ; துன்பம் செய்யும்.”

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

“திருடாதே பாப்பா திருடாதே

வறுமை நிலைக்குப் பயந்து விடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே (திரு)

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து – தவறு

சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ

தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா – அது

திரும்பவும் வராமே பாத்துக்கோ (திரு)

………………………………….. பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம்: படம் – திருடாதே, 1961.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக