செவ்வாய், 28 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…18.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…18.

ஒளவையார் அருளிய மூதுரை.

 

நல்லார் தொடர்பால் வரும் நன்மை

“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று.”

 

 நல்லவரைக் காண்பதும் அவர் சொற்களைக் கேட்பதும் நன்மையாகும் ; அவருடைய நல்ல குணங்களைப் பேசுவதும் அவரோடு கூடியிருப்பதும் நல்லறிவும் நல்லொழுக்கமும் தரும்.”

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல். குறள்;441.

 

அறத்தின் இயல்பை அறிந்து தன்னினும் மூத்த அறிவுடையாரது நட்பை ஆராய்ந்து அறிந்து பற்றிக் கொள்க,

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக