சனி, 25 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…17.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…17.

ஒளவையார் அருளிய மூதுரை.

 

அறிவு, செல்வம், குணம் அமைதல்

 

“நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத்

தவத்தளவே யாகுமாம் தான்பெற்ற செல்வம்

குலத்தளவே யாகும் குணம்.

 

 நீரினது உயரத்தின் அளவே அல்லிக்கொடி இருக்கும். அதுபோல ஒருவர்க்கு அவர் கற்ற நூலின் அளவே அறிவு அமையும். செய்த தவத்தின் அளவே செல்வம் அமையும்; பிறந்த குடியின் இயல்புக்கு ஏற்றவாறே குணம் அமையும்.

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

”இனத்தினான் ஆகும்பழி புகழ் தம்தம்

மனத்தினான் ஆகும் மதி.” காரியாசான், சிறுபஞ்சமூலம், 79.

 

மக்களுக்குத் தத்தம் தீய சேர்க்கையால் பழியும் நற்சேர்க்கையால் புகழும் மனத்தின் இயல்புக்கு ஏற்ப அறிவும் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக