புதன், 29 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…19.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…19.

ஒளவையார் அருளிய மூதுரை

நல்லோரால் எல்லார்க்கும் நன்மை

 

“நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யு மழை..”

 

 நெல்லுக்கு இறத்த நீரால் புல்லும் வளம் பெறும். அது போல நல்லோரைச் சார்ந்த எல்லோரும் பயனடைவர்.

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

 

“நீரின்று அமையா உலகம் போலத்

தாமின்று அமையா நம் நயந்தருளி “ – கபிலர், நற்றிணை; 1.

 

தோழி, நீரின்றி அமையாது உலகியல் வாழ்வு என்பதைப் போல அவரின்றி

நம் வாழ்வு சிறக்காது என்பதை நன்கு அறிந்த  நல் உள்ளம் கொண்டவர் என் தலைவர், என்றாள் தலவி.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக