வெள்ளி, 10 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…8.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…8.

” இணக்கம் அறிந்து இணங்கு ”-ஒளவையார், ஆத்திசூடி

நல்ல குணம் உடையவரோடு நட்புக் கொள்.

நண்பனாகப் பழகுவதற்கு நமக்குப் பலர் வந்து சேரலாம் ஆயினும் ஒரே ஒருவன் தான் நல்ல நண்பனாக இருப்பதற்குத் தகுதி உடையவன் ஆவான், அப்படிப்பட்ட ஒருவனை நண்பனாகத் தேர்ந்து தெளிய வேண்டும்.

நல்ல நண்பனை எப்படித் தேர்ந்தெடுப்பது….? வள்ளுவர் வழி நின்று தேர்ந்தெடு…!

 

“உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு- 798.

 

ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமல் இருக்க வேண்டும் ; அதுபோல் நமக்குத் துன்பம் வந்தபோது கண்டும் காணாது ஒதுங்கிச் செல்பவர்தம் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.

 

“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.”-819.

 

சொல் ஒன்றும் செயல் வேறு ஒன்றுமாய் இருப்பவரின் நட்பு நனவில் மட்டுமின்றிக் கனவிலும் துன்பம் தருவாதாகும்.,  என்பதை உணர்ந்து நல்ல நண்பனைத் தேர்ந்தெடு, வாழ்க்கை இனிக்கும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக