வெள்ளி, 3 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…2.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…2.

இளமையில் கல் -ஒளவையார், ஆத்திசூடி-2

 

இளமையிலேயே கல்வி கற்கத் தொடங்க வேண்டும். ஆறறிவு உள்ள மனிதன் ஐந்தறிவு உடைய விலங்கினின்றும் வேறுபட்டு மானமுள்ள மனிதனாக வாழ வழி வகுப்பது கல்வி ஒன்றே.

 அதனாலன்றோ “ கேடில் விழுச்செல்வம் கல்வி –என்றார் திருவள்ளுவர். அழியாத, பிறரால் அழிக்கமுடியாத  செல்வமாக விளங்குவது கல்வி ; அக்கல்வியினால் அறிவு பெற, “ உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் ; பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்று முன்னோர் உரைத்த வழியைப் பின்பற்றி, நல்லாசிரியரைப் போற்றி வழிபட்டுச் செவி வாயாக, நெஞ்சு களனாக; கேட்டவை கேட்டவை  விடாது உளத்தமைத்து…. கல்வி கற்க வேண்டும்

 இளமையில், அன்னையே முதல் ஆசிரியர். அன்னையிடம் அமர்ந்து அகரம் கற்றுச் சிகரம் தொடுவாயாக.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக