சனி, 4 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…3.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…3.

”எண்ணெழுத்து இகழேல்”-ஒளவையார், ஆத்திசூடி

கணக்கையும் இலக்கணத்தையும் பழித்து ஒதுக்காமல் ஆர்வமுடன் கற்றுக்கொள்.

கணக்கு ஆமணக்குப் போல் கசக்காது. கணக்கை விரும்பிப் படித்தால் அறிவு கூர்மையாகும்,ஏனைய பாடங்களையும் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

உடலுக்கு உயிர் போன்று மொழிக்கு இலக்கணம் விளங்குகிறது . நம் தாய் மொழியின் இலக்கணமும் கணக்கைப் போன்று ஓர் அறிவியல் பாடமாகும். தாய்மொழியில் அறிஞராக, கவிஞராக, பேச்சாளராகப் பலரும் பாராட்டும் வண்ணம் பெயர் எடுக்கலாம்.

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்றார் திருவள்ளுவர். 

வாழும் உயிர்க்கு அறிவு வளம் அளிக்கக் கூடியது எண், எழுத்து ஆகும் ; இவ்விரண்டும் நமதிரு கண்கள் போன்றனவாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக