திங்கள், 6 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…4.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…4.

ஞயம்பட வுரை: அன்னை, தந்தை, சிறியோர், பெரியோர் என அனைவரிடத்தும் இனிமையாகப் பேசு.

”முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்

இன்சொல் இனிதே அறம்” – (93 )என்கிறார் திருவள்ளுவர். எவரையும் வெறுப்புடன் பார்க்காது  முகமலர்ச்சியுடன்  பார்த்துப் பின் மனமகிழ்ச்சியுடன் இனிய சொற்களைச் சொல்லுதலே நற்பண்பாகிய அறமாகும்

“இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம்

வன்சொலால் ஒன்றும் மகிழாதே – பொன்செய்

அதிர்வளையாய் பொங்காது அழல் கதிரால் தண்ணென்

 கதிர்வரவால் பொங்கும் கடல்” – சிவப்பிரகாசர், நன்னெறி.

                                ஒலிக்கின்ற வளையல் அணிந்த பெண்ணே…! குளிர்ச்சி பொருந்திய நிலவின் வரவால்தான் கடல் பொங்கும் ; சுடும் சூரியன் வரவால் கடல் பொங்காது. அது போல மக்கள் இனிய சொற்களைக் கேட்டு மகிழவர் ; கடுமையான சொற்களைக் கேட்டு ஒருபோதும் மகிழ மாட்டார்.

1 கருத்து:

  1. முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
    இன்சொல் இனிதே அறம்

    அருமையான குறள் புன்முறுவல் பற்றியும், அகத்திலிருந்து வரும் இன்சொல் பற்றியும் கூறும் இக்குறளை மறக்க முடியாது. இக்குறளை உளத்தில் கொண்டு வாழ்வோர் வாழ்வாங்கு வாழ்பவர் ஆவர்.!

    பதிலளிநீக்கு