வெள்ளி, 24 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…16.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…16.

ஒளவையார் அருளிய மூதுரை.

 

உயிரினும் மானம் பெரிது

 

“உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டாற் பணிவரோ – கற்றூண்

பிளந்திறுவ தல்லாற் பெரும்பாரம் தாங்கின்

தளர்ந்து வலையுமோ தான்.”

 

கல்லால் ஆகிய தூண் பெரும் பாரம் தாங்க நேர்ந்தால் வளையாமல் பிளந்து முறியும். அதுபோல், மானம் உடையோர் மானக்கேடு வருமிடத்து உயிரைவிட்டு மானத்தைக் காப்பர்.

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

இணைப்பு:

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.-குறள். 969.

 

பனிமலையில் வாழும் கவரிமா எனும் விலங்கு,,தன் உடம்பினின்றும் மயிர் நீங்கின் உயிர் வாழாது. அதுபோல், தன்மானம் உடையோர் தமக்கு மானக்கேடு வருமாயின் வாழ விரும்பாது உயிரை விட்டுவிடுவர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக