தமிழமுது -11.
- தாய்மொழி வழிக் கல்வி.
பேராசிரியர் முனைவர் தமிழண்ணல்
: 1928 – 2015.
ஆங்கிலக் கல்வியின் வாயிலாக
மிகப் பெரும்பான்மை மக்களிடமிருந்து கல்வி விலகியே இருக்கிறது. கல்விப் புரட்சி உண்டாக்க
வேண்டிய காலகட்டத்தில் எழுத்தறிவு, இயக்கம் நடத்துவது ஏமாற்று வேலையே. ‘எல்லோருக்கும்
கல்வி’’ என்ற கொள்கை நடைமுறைப்படுத்தபட வேண்டுமானால் அக்கல்வி எம்மொழி வழியாகத் தரப்பட
வேண்டும் எனச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
“தாய்மொழியின் மீதுள்ள பற்றின் காரணமாகத் தாய்மொழிக்
கல்வியை நாங்கள் வற்புறுத்தவில்லை. சமுதாயத்தின் எல்லாநிலை மக்களுக்கும் கல்வியும் உயர்கல்வியும் கிடைக்க வேண்டும். ஏழை
எளிய மக்களுக்கு உயர்கல்வி எட்டாக் கனியாக இருப்பதற்கு முழுமுதல் காரணம் ஆங்கிலவழிக்
கல்வியே.” என்கிறார்.
யுனெஸ்கோ ஆய்வறிக்கை.
“It should be remembered that only the native Language is the medium of instruction in most of the countries of the world. Only in India it has become a problem due to opposition from scholars UNESCO after a through study has indicated that education through foreign medium is disadvantages.”
கல்வியில் இத்தகைய பின்னடைவிற்கு இன்றைய இந்தியக் கல்விக் கொள்கையே காரணம்.
நம்முடைய பண்பாட்டிற்கும் மொழிக்கும் ஏற்ப ஒரு புதிய கல்விமுறையை உருவாக்காமல் மேலை
நாட்டுத் தாக்கத்திற்குஆட்பட்டுக் கிடப்பது முறையன்று என்பதை மிக நாகரிகமாகச் சுட்டிக்
காட்டுகின்றார் கனடா நாட்டு அறிஞர் ஜான் ஸ்பெல்மேன்.
……………….தொடரும்……………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக