செவ்வாய், 1 ஏப்ரல், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 186–அறிவியல் சிந்தனைகள் :இடைக்காலம் – சமயச் செல்வாக்கு,

 

சான்றோர் வாய் (மைமொழி : 186–அறிவியல் சிந்தனைகள் :இடைக்காலம் – சமயச் செல்வாக்கு,

 இடைக்காலம் சமயச் செல்வாக்கு உயர்ந்த நிலையில்– சிந்தனையாளர்கள் சமயம் சார்ந்திருந்தனர் -  சமய நிறுவனங்கள் செல்வச் செழிப்பில் மிதந்தன  - சமயக் குருமார்களின் சுகபோக வாழ்வு – மக்களை அரசும் சமயமும் அடிமைப்படுத்தின,சுரண்டின – அரசு சமயத்திற்கு அடிபணிந்தது -  இடைக்காலத் தத்துவம் கிறித்துவ சமயத்திற்குக் குற்றேவல் செய்துகொண்டிருந்தது –

அரசு + சமயம் = இரு சம்மட்டிகள் – மக்கள் அடிபட்டு அறிவையும் பொருளையும் இழந்தனர்.

 தத்துவக் கல்வி – சமயக் கல்வியாக மாறியது – சமுகத்தில் மேல்மட்ட மக்கள் மட்டும் கல்வி பெற்றனர் – மக்கள் அறியாமையால் கடவுளுக்கு அஞ்சி அடிமையாகக் கிடந்தனர் – மக்கள் பலவழிகளில் சுரண்டப்பட்டனர்.

அரசுக்கும் சமயத்திற்கும் கடும் போட்டி  - மன்னன் பெரியவனா..? போப்பாண்டவர் பெரியவரா..? – பூசல் வலுத்தது – 10ஆம் நூற்றாண்டில் பூசல் உச்சக் கட்டத்தை அடைந்தது.

 11ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ரோஸலின். ஆன்செலம் முதலிய சமயச் சார்புடைய சிந்தனையாளர்கள் தோன்றினர். சமயம் தழைக்கச் சிந்தித்தனர் – பண்டைய கிரேக்கத் தத்துவங்களுக்குச் சமயச் சாயம் பூசப்பட்டது.

ரோசலின் – Roscelin – கி,பி. 1050 – 1122. ……தொடரும்…

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக