தமிழமுது -12
- தாய்மொழி வழிக் கல்வி.
பேராசிரியர் க. கைலாசபதி :
-1933 – 1982.
ஒரு நாட்டின் தன்மானச் சின்னமாகத் திகழ்வது
தாய்மொழிதான். ஒரு நாட்டில் தாய்மொழிக்குரிய
இடம் தலைமை இடம்தான்; இதில் மாற்றுக் கரித்துக்கு இடமே இல்லை. ஒரு சுதந்திர நாட்டின்
சிறப்பம்சம் தாய்மொழியின் தலைமை இடமே. ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றோம் ; ஆங்கிலத்திலிருந்து
விடுதலை பெறவில்லை. இதற்கிடையே இந்தியைத் தேசிய மொழியாக ஏற்றுச் செயல்பட ஒரு சமாதான
உரிமை ஒப்பந்தம் செய்யவும் முயலக்கூடாது. இந்தியா போன்று சுதந்திரமடைந்த இலங்கையில்
அனைவரும் தம் தாய்மொழியில் கல்வி பயின்று வருகின்றனர். தாய்மொழிவழிக் கல்விதான் உண்மையான
முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்கிறார் டாக்டர் க. கைலாசபதி.
”In the academic world of Sri
Lanka Mother tongue is given in due place and a child can study from the
primary level to Higher education in its Mother tongue.
Heaving been a teacher for the
past 25 years I firmly believe that only if the medium of instruction is the mother
tongue, actual progress is possible.”
பேராசிரியர் பி. விருத்தாசலம்: 1940
-2010.
தமிழ் மொழிவழிக் கல்வி இயக்கத் தலைவர்.
ஐயா அவர்கள் பல ஆண்டுகளாகத் தமிழ்வழிக் கல்விக்குப் போராடியவர். 1990இல் தஞ்சையில்
தமிழ் வழிக் கல்வி மாநாட்டை நட்த்தித் தமிழ் உலகுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
“ ஆங்கில மொழியைக் கற்பதில் தவறில்லை, ஆனால்,
பிற பாடங்களைத் தமிழில் கற்பிக்க வேண்டும். இதனை வலியுறுத்துவதே தமிழ் வழிக் கல்வி
இயக்கம் “ என்றார்.
இயக்கம்
இந்தப் புனிதமான நோக்கத்தை முன்வைத்துத் தமிழக அரசுக்கு உறுதுணையாக நின்று தமிழை வளர்த்து
வருகிறது.
“உலகத்தில் எல்லா நாடுகளிலும் அந்தந்த
மண்ணுக்குச் சொந்தமான அந்தந்த நாடுகளுக்குரிய தாய்மொழியில் கல்வி கற்பிக்கிறார்கள்.
கல்வி கற்ற மாணவர்கள் தம்முடைய தாய் நாட்டிலேயே தங்கித் தம் தாய்நாட்டு மக்களுக்கு
தொண்டு செய்து, தாம் பிறந்த நாட்டை வளர்ப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில்தான் மண்ணுக்குரிய மொழியாகிய தமிழில்
கல்வி கற்பிக்க மறுத்து, அயல்மொழியாகிய ஆங்கிலத்தில் கல்வி கற்பிக்கும் கொடுமை நடக்கிறது.
என்று கூறுகின்றார் பேராசிரியர் பி. விருத்தாசலம்.
……………….தொடரும்……………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக