வியாழன், 3 ஏப்ரல், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 188–அறிவியல் சிந்தனைகள்: புனிதர் தாமஸ் அக்கினாஸ் – Saint Thomas Acquinas – கி.பி. 1225 – 1274.

 

சான்றோர் வாய் (மைமொழி : 188–அறிவியல் சிந்தனைகள்: புனிதர் தாமஸ் அக்கினாஸ் – Saint Thomas Acquinas – கி.பி. 1225 – 1274.

இடைக்காலச் சிந்தனையில் தேக்கம் நிலவியது . கிரேக்கத் தத்துவங்களைப் புதிய சொற்களில் வடித்தனர் ;  கோட்பாடுகளைத்  திரித்தும் வளைத்தும்  கிறித்துவச் சமயத்திற்குப் பயன்படுத்தினர். மடாலயங்கள் சுதந்திரமான சிந்தனைக்குத் தடுப்புச் சுவர்களாயின.


 மடாலயக் கல்வி முறை வளர்ந்தது 10ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பாரிசு பல்கலைக் கழங்களில் தத்துவ விளக்கங்கள் ‘புலமைத்துவம்’ (Scholasticism)  எனப் பெயர் பெற்றது.  Scholasticism was a medieval European philosophical movement or methodology that was the predominant education in Europe from about 1100 to 1700.[1] It is known for employing logically precise analyses and reconciling classical philosophy and Catholic Christianity.[

 

 இதில் மதச் சார்புடைய தத்துவ வரையறைக்குட்பட்டுச் சிந்திக்க வேண்டியதாயிற்று. இச்சிந்தனை முறைகூட சிலவேளைகளில் சமயத் தலைமை அச்சுறுத்தியது. புலமைக் கோட்பாளர்கள் புரியாத மொழியில் பேசி,எழுதி வருவதைப் பெருமையாகக் கருதினர்.

 கல்விப் புரட்சி :

12ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கல்விப் புரட்சி, பண்பாட்டுப் புரட்சியின் பலனாக அரிஸ்டாட்டிலின் அளவையியல் தத்துவம்  வளரலாயிற்று. இது கிறித்துவத்திற்கு எதிரானபோதும் அதனைப் போற்றினர். அளவையியல் கல்வியும் பயிற்சியும்  சிந்தனையைச் செழிக்கச் செய்தன. அரிசுடாட்டில் தத்துவத்திற்கு வலிவும் பொலிவும் தந்தவர் அக்கினாஸ்.

சமயமும் தத்துவமும்  இருவேறு களப்பரப்புடையவை அவற்றை இயைந்து போகச் செய்வதோ ஒருங்கிணைப்பதோ இயலாத செயல் என்றும் கூறினார்.

அக்கினாஸ் :

அக்கினாஸ் 25 நூல்கள் எழுதியுள்ளார். கிறித்துவ சமயத்தை அதன் வீழ்ச்சியினின்று காப்பாற்றியவர். இத்தாலியில் பிறந்தவர். கிறித்துவ  சமயத்தின்  தீவிர இயக்க மான   “தொமினிகண்” இயக்கத்தில் ஈடுபாடுகொண்டு துறவு வாழ்க்கை மேற்கொண்டார். கடவுள் முதல் மனிதன் வரை பருப்பொருள் முதல் நுண்பொருள் வரை அனைத்தையும் ஆராய்ந்துள்ளார்.

 இறையியல் சுருக்கம்  ”சம்மாவிரிவுரை’ நூலில் (Summa Theologica) கடவுள் உண்டு என்பதற்கு ஐந்து நிரூபணங்களைத் தந்துள்ளார். கடவுள் இயக்கப்படாத இயக்கி, தனக்குத்தானே இயக்கம் உடையவராகவும் பிறவற்றையெல்லாம்  இயக்கும் ஆற்றல் உடையவராகவும் இருக்கிறார்.” என்றார்.

இறைமை வாழ்வு:

 மானிட வாழ்வின் முடிந்த பயன் இறைவனுடன் ஒன்றி வாழ்வதே..! இறைவன் அருளால்தான் இந்நிலை கிட்டும் . இறைவனை அறியும் அறிவே தலையாய அறிவு ; ஆன்மா உலகியல் நிலைக்கு அப்பாற்பட்டது. உடல் ஆசைகள் உலகியல் சார்ந்தவை ; ஆன்மாவின் ஆசையும் வேட்கையும் உலகியல் கடந்த நிலையிலேதான் நிறைவுறும்.

இவரின் தத்துவக் கருத்துகள் அரிஸ்டாட்டிலின் கருத்துகளை அடியொற்றியவை.

…………………………….தொடரும்………………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக