தமிழமுது -34 - கடவுள் கோட்பாடு
–தொல்தமிழர் வழிபாடு
முருகன்—அறுபடைவீடு.
மேற்கூறியவறு நக்கீரர், திருமுருகாற்றுப்படையில் முருகனின்
வரலாற்றை வரைந்துள்ளார். தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள தமிழர்தம் வழிபாடு,
புராணங்களில் புனைந்துரைகளாக இடம்பெற்றுள்ளன. ஆரிய
மயமாக்கப்பட்ட தமிழர் கடவுள் வழிபாடு குறித்துத் தெளிவாகச் சிந்திக்க வேண்டுகிறேன்.
பத்துப்பாட்டு நூல்களூள் முதலில் இடம்பெற்ற திருமுருகாற்றுப்படையத்
தொடர்ந்து பிற நூல்களில் இடம்பெற்ற முருகவழிபாடு குறிப்புகளைக் காணலாம்.
2.) பொருநராற்றுப்படை:
பொருநராற்றுப்படையில் நான்கு இடங்களில் கொற்றவையும்
முருகனும் சுட்டப்பட்டுள்ளனர்.
3.) சிறுபாணாற்றுப்படையில் மூன்று இடங்களில் முருகவாழிபாடு
குறிப்பிடப்பட்டுள்ளது.
4.) பெரும்பாணாற்றுப்படியில், முருகனைப்போலும்
மறவர் காவல் செய்தனர். கொற்றவையின் மகன் முருகன் என்னும் கருத்து வளர்ந்த நிலையை இந்நூல்
சுட்டுகிறது.
5.) முல்லைப்பாட்டு ;…………………………..
.
6. ) மதுரைக்காஞ்சி, திருமால் திருவோண நாளில் பிறந்தவன் என்று
கூறுகிறது. மக்கள் துன்பம் நீங்க வேலன், முருகனை
வேண்டி ஆடிப் பாடுவது கூறப்பட்டுள்ளது.
7.)நெடுநல்வாடை, மாலையில் பெண்டிர் நெல்லும் மலரும்
தூவி இரும்பு செய்விளக்கின் ஈர்ந்திரிக் கொளுவி இல்லுறைத் தெய்வத்தை வழிபட்டனர்.
8.)குறிஞ்சிப்பாட்டு, பழந்தமிழர் முருக வழிபாட்டு முறையைத்
தெளிவாகச் சுட்டுகிறது.
தலைவியின் தனிமைத்
துயரம் தோழியை மிகவும் வருத்தியது. மகளின் துயர் அவள் தாயை வருத்த தாயும்
மிகவும் மனம் வருந்தி, அகன்றை இடத்தையுடைய
இவ்வூரில் குறி சொல்லும் கட்டுவிச்சி, வேலன் ஆகியோரை அழைத்துக் கேட்டாள், அவர்களும் தலைவியின்
வருத்தம் தெய்வத்தால் வந்தது என்று கூறினர். தாயும் வேறுபட்ட வடிவங்களையுடைய பல தெய்வங்களுக்கு
மணப்புகை, சந்தனம் முதலியன கொடுத்துப் பரவியும் வணங்கியும் பல நிறப் பூக்களைச் சிதறியும்
வழிபட்டும் செய்த முயற்சிகளால் அந்நோய்க்கான காரணத்தை அறிய இயலாது வருந்தினாள். நோய்க்குக்
காரணம் தலைவனே என்பதைத் தோழி அறிவாள்.
………………………..தொடரும்…………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக