புதன், 28 மே, 2025

தமிழமுது -40 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு . முருகன், சிவன், கொற்றவை:

 

தமிழமுது -40 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

. முருகன், சிவன், கொற்றவை:

முருகன்:

சங்க இலக்கியங்களில் செவ்வேள் சிறப்பிடம் பெறுகிறார்.  தமிழர் இயற்கையை வழிபட்டனர் என்பதற்கு செவ்வேள் சான்று, கல் தோன்றி மணதோன்றிய நிலை. மலை மக்கள் இயற்கை அழகில் ஈடுபட்டு முருகனைப் படைத்தனர். முருகன் குறிஞ்சிக்கு மட்டும் கடவுளன்று, நில வேறுபாடின்றி அனைவரும் வழிபட்டனர்.

சேய் – குழந்தை, சேய்மை, செந்நிறம். மாயோனுக்கு மாலன் என்ற பெயரும் சேயோனுக்கு வேலன், முருகன், வேள் என்ற பெயர்களும்; இந்திரனாகிய வேந்தனுக்கு வானவன் என்ற பெயரும் இயமனாகிய கூர்ற்றத்துக்கு மடங்கல், மறலி, என்ற பெயர்களும் ; கொற்றவைக்குப் பழையோள், காடுகாள் (காடுகிழாள்) என்ற பெயர்களும் தனித் தமிழ்ச் சொற்களால் இத் தெய்வ வழிபாடு இந்நிலத்திருந்தன.

காலை இளஞாயிறு செவ்வேள் (முருகன்) நீலக்கடற் பரப்பு – மயில், கடும்பகல் வெம்மைக் கதிர் சிவன் என்பர்.

 முருகன் வீரமிக்கக் கடவுளாகச் சங்க நூல் கூறும். வெல்போர் சேஎய் – வெல் போர்க் கொற்றவை சிறுவ – கடம்பமர் நெடுவேள் என வருவதறிக.

 

கொற்றவை:

கொற்றவை வெற்றித் தெய்வம்

கொற்றம் – வெற்றி ; அவ்வை – அம்மை.

வெற்றித் தாயாகிய  இவளை வணங்குவதைக் ”கொற்றவை நிலை’ என்கிறார் தொல்காப்பியர் போருக்குச் சென்ற தலைவன் வெற்றி பெற்று மீள, கொற்றவையை வழிபட்டதை நெடுநல்வாடை கூறுகிறது. சேர மன்னர் அயிரை மலையில் உறைந்த கொற்றவையை வழிபட்டான் என்பதைப் பதிற்றுப்பத்து கூறும்.    

சிவன்:

 சங்க காலச் சிவனும் சிந்து சமவெளிச் ச்சிவனும் ஒன்று ; வேதகாலச் சிவன் வேறு. அவன் உருத்திரன் (அச்சம் தருபவன்) சிவன் தமிழரின் கடவுள் ; சைவம் தமிழரின் நெறி.. சிவன் – சிவப்பு  ; சமண பெளத்த வருகைக்கு முன்பே சைவநெறி இருந்தது…………. ………………….தொடரும் …….

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக