தமிழமுது -42 - கடவுள் கோட்பாடு
–தொல்தமிழர் வழிபாடு
முடிவுரை: முருக வழிபாடே- தொன்மை வழிபாடு;
சிவன், குமரன் என்று சொல்லப்படும் தெய்வங்கள் முற்கால
மக்களுள் சிறந்தவராய் இருந்திருத்தல் வேண்டும்.அவர்தம் ஆற்றலாலும் ஞானத்தாலும் பெருமை பெற்று நாளடைவில்
வழிபாடு கொள்ளத் தொடங்கி, இறுதியில் அவர்தம் வரலாறு மறைய தெய்வங்களாயினர்
என்று கொள்வதற்குப் பல ஆதாரங்கள் உண்டு என்பர்.
தமிழரின் முருக வழிபாடும்
ஆரியரின் ஸ்கந்த சண்முக வழிபாடும் தொடக்கத்தில் வெவ்வேறு வழிபாடாக இருந்தது, பிற்காலத்தில் இரண்டும்
இணைந்து கலப்புர்றுத் திராவிட ஆரிய கலப்புதான் இக்காலத்து முருக சுப்பிரமணிய வழிபாடு.
முருக வழிபாடு உலக இன்ப வாழ்க்கையைப்
பெறுவதற்காகவே செய்தனர். வீடு பேற்றைக் (முக்தி) கருதி மக்கள்
வழிபடவில்லை. பழங்கால முருக வணக்கமும் பரிபாடல் முருக வணக்கமும்
வேறுபடுகின்றன. முருகனைச் சிவகுமாரன் என்று பிற்காலச் சைவ நூல்கள்
கூறுகின்றன. மால்மருகன்
என்று பிற்கால வைணவ நூல்கள்
கூறுகின்றன. தமிழ்நாட்டின் இருபெரு சமயங்களும் முருகனோடு தங்கள்
தனிப் பெருந்தெய்வங்கள் உறவு கொண்டுள்ளதாகக் கூறும். அந்த அளவிற்கு
முருக வழிபாடு செல்வாக்குப் பெற்றிருந்தது.
தமிழ்நட்டில் வரலாற்றுக்
காலத்திற்கு முந்தைய ஆதிச்சநல்லூர் தாழி அடக்கம் காலத்திலேயே முருக வணக்க முறை இருந்தது. சங்க இலக்கிய வழி முருகனுக்கு ஒரு மனைவி இருந்ததை…
“முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல
“ – நற்றிணை . 82.
பரிபாடல் காலத்திற்குப்
பின்னரே முருகனுக்கு இரு மனைவியர்.
………. ………………….தொடரும் …….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக