தமிழமுது -41 - கடவுள் கோட்பாடு
–தொல்தமிழர் வழிபாடு
. முருகன்,
கொற்றவை,
சிவன் ……தொடர்ச்சி …
சைவ சித்தாந்தம் கி.பி.
5ஆம் நூற்றாண்டுக்குப்பிந்தான் தெளிவாக அறியப்படுகிறது எனினும் சங்க இலக்கியங்களில்
“சிவன்” எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை குறிப்பாகவே குறிக்கப்படுகிறான். தொல்காப்பியர் சிவனைப்பற்றி யாதும் கூறவில்லை.
”நீலமணி மிடற்று ஒருவன்” – புறநானூறு
:56.
”காரி உண்டிக் கடவுள் “ – மலைபடுகடாம்.
”தாழ் சடையன் “ - புறநானூறு : 1.
” கொன்றைமாலையன்”- புறநானூறு : 5.
“ ஆலமர் மடவுள் “ - புறநானூறு :138.
தெற்கில் பொதிய மலை ; வடக்கில் கைலாயமலை.
சிவன், இராமனுக்கும் கிருஷ்ணனுக்கும்
முந்தியவன். தமிழ்ச் சங்கம் காலம், கி.மு.10490 என்பர். இச்சங்கத்தைத் தோற்றுவித்துத் தலைவராய்
இருந்தவர் சிவன், இத்தனை பழமை சிறப்புயுடைய சிவன் எந்தச் சங்க இலக்கியத்திலும் குறிக்கப்
(பெயரால்) பெறவில்லை.; குறிப்பாகவே உணர்த்தப்படுகிறார்.
ஆடை புலித்தோல் – குளிர்
தாங்க
பூச்சு – சாம்பல் – குளிர்
தாங்க.
உணவு – காய்கனி இலை – சைவ
உணவு.
சாத்திரங்கள் தோன்றிய பின்பு, சித்தர்களின் சிவன்,
பக்தர்களின் சிவன் ஆனான்.
சித்தர்கள் இயக்கத்தின்
தலைவனாக சிவன் இருந்திருக்க வேண்டும்.. அன்பு நெறியே சிவன் நெறி; அதுவே தமிழர் நெறி
. சிவ வழிபாடு காலந்தோறும் மாறி, சமயச் சின்னங்களைப் பெற்றது.
சிவன் உடல் வலிமையுடன் மன வலிமையும் பெற்றவராக
விளங்கியதோடு வான சாத்திரம், மருத்துவம் முதலிய கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
கோடையில் இமயமலையில் – குளிர் காலத்தில் வேறிடம் செல்வது, ஏழை எளியவர்களுக்கு உதவுதல்,
இமயமலையை ஆண்ட அரசனின் மகளை மணம் புரிந்துள்ளார். சிவன் புராண நாயகன் இல்லை, வரலாற்று
நாயகன் என்பர். சிவன் சித்தர் இயக்கத்தின் தலைவன் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
முடிவுரை:
………. ………………….தொடரும் …….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக