வியாழன், 29 மே, 2025

தமிழமுது -41 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு . முருகன், கொற்றவை, சிவன்

 

தமிழமுது -41 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

. முருகன், கொற்றவை, சிவன்

சிவன் ……தொடர்ச்சி …

சைவ சித்தாந்தம் கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப்பிந்தான் தெளிவாக அறியப்படுகிறது எனினும் சங்க இலக்கியங்களில் “சிவன்” எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை குறிப்பாகவே குறிக்கப்படுகிறான்.  தொல்காப்பியர் சிவனைப்பற்றி யாதும் கூறவில்லை.

”நீலமணி மிடற்று ஒருவன்” – புறநானூறு :56.

”காரி உண்டிக் கடவுள் “ – மலைபடுகடாம்.

”தாழ் சடையன் “ - புறநானூறு : 1.

” கொன்றைமாலையன்”- புறநானூறு : 5.

 “ ஆலமர் மடவுள் “ - புறநானூறு :138.

தெற்கில் பொதிய மலை ; வடக்கில் கைலாயமலை.

சிவன், இராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் முந்தியவன். தமிழ்ச் சங்கம்  காலம், கி.மு.10490  என்பர். இச்சங்கத்தைத் தோற்றுவித்துத் தலைவராய் இருந்தவர் சிவன், இத்தனை பழமை சிறப்புயுடைய சிவன் எந்தச் சங்க இலக்கியத்திலும் குறிக்கப் (பெயரால்) பெறவில்லை.; குறிப்பாகவே உணர்த்தப்படுகிறார்.

ஆடை புலித்தோல் – குளிர் தாங்க

பூச்சு – சாம்பல் – குளிர் தாங்க.

உணவு – காய்கனி இலை – சைவ உணவு.

 சாத்திரங்கள் தோன்றிய பின்பு, சித்தர்களின் சிவன், பக்தர்களின் சிவன் ஆனான்.

 சித்தர்கள் இயக்கத்தின் தலைவனாக சிவன் இருந்திருக்க வேண்டும்.. அன்பு நெறியே சிவன் நெறி; அதுவே தமிழர் நெறி . சிவ வழிபாடு காலந்தோறும் மாறி, சமயச் சின்னங்களைப் பெற்றது.

சிவன் உடல் வலிமையுடன் மன வலிமையும் பெற்றவராக விளங்கியதோடு வான சாத்திரம், மருத்துவம் முதலிய கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். கோடையில் இமயமலையில் – குளிர் காலத்தில் வேறிடம் செல்வது, ஏழை எளியவர்களுக்கு உதவுதல், இமயமலையை ஆண்ட அரசனின் மகளை மணம் புரிந்துள்ளார். சிவன் புராண நாயகன் இல்லை, வரலாற்று நாயகன் என்பர். சிவன் சித்தர் இயக்கத்தின் தலைவன் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

முடிவுரை:

………. ………………….தொடரும் …….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக