புதன், 4 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 424

திருக்குறள் – சிறப்புரை : 424
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு. ~ 424
பிறர்க்கு அரிய பொருளை விரித்துரைக்கும்போது அவர் எளிதில் புரிந்துகொள்ளுமாறு சொல்லவேண்டும் ; பிறர் கூறும் கருத்துக்களின் நுண்பொருளைத் தாமே ஆராய்ந்து அறிந்துகொள்வதே அறிவாகும்.
“ புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
 புலம் மிக்கவர்க்கே புலனாம் ….” ~ பழமொழி.

அறிவு மிக்கவரது அறிவினை ஆராய்ந்து அறிதல் அறிவு மிக்கவர்க்கே உளதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக