வியாழன், 5 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 425

திருக்குறள் – சிறப்புரை : 425
உலகம் தழீஇயது  ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு. ~ 425
அறிவு எனப்படுவது உலகத்தைத் தன்வயப்படுத்துவதாக அமைதலாம் அவ்வாறான ஆற்றலுடைய அறிவு    மங்குவதும் இல்லை மறைவதும் இல்லை ; எக்காலத்தும்  நிலைத்த தன்மை உடையதாம்.
“ ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
 ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்.” ~ முதுமொழிக் காஞ்சி.

இவ்வுலகத்தில் உள்ள மக்கள் எல்லாருள்ளும் உயர்வடைய விரும்புவோன் பிறரிடம் காணப்படும் சிறந்த இயல்புகளையே பேசப் பழகுதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக