செவ்வாய், 31 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 446

திருக்குறள் – சிறப்புரை : 446
தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல். ---- ௪௪௬
தகுதியும் திறமையும் வாய்ந்த சான்றோர் ஒருவரைத் தனக்குத் துணையாகக் கொண்டு தானும்  அறவழியில்  நடக்கும் வல்லமை உடைய ஒருவனுக்குப் பகைவர்கள் செய்யக் கூடியதொரு
    தீங்கு  இல்லை என்பதாம்.
“ ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து,” – நாலடியார்.

பல நூல்களையும் ஆராய்ந்து, அந்நூல்கள் கூறும் வழியிலே நின்று, உயர்ந்தோரிடம் பல உண்மைகளைக் கேட்டறிந்து வாழ்கின்ற அறிவுடையார் எந்நாளும் சினந்து கடுஞ் சொற்களைக் கூறமாட்டார்கள்.

1 கருத்து:

  1. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது. ...தொடர்ந்து தங்களின் பதிவுகளைப் படித்து பல அரிய செய்திகளை அறிகிறேன் ஐயா. நன்றி.

    பதிலளிநீக்கு