செவ்வாய், 3 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 423

திருக்குறள் – சிறப்புரை : 423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. ~ 423
எத்தகைய பொருள் குறித்தும் யார் ஒருவர் சொல்லக் கேட்பினும்  அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தெளிவு பெறுதலே அறிவுடைமையாகும்.
“உணர உணரும் உணர்வு உடையாரைப்
 புணரப் புணருமாம் இன்பம் ….” ~ நாலடியார்.

நூலின் பொருளை உணரத்தக்க வகையிலே உணர்ந்துகொள்ளும் அறிவுள்ளவரை நண்பராகச் சேர்த்துக் கொள்வதனால்தான் இன்பம் உண்டாகும்.

1 கருத்து: