வெள்ளி, 13 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 433

திருக்குறள் – சிறப்புரை : 433
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். ~௩௩
பழிக்கு அஞ்சி வாழும் நல்லொழுக்கம் உடையோர் தினை அளவாகிய மிகச் சிறிய குற்றம் வரினும்  அதனைப் பனை அளவாகக் கருதி மிகவும் அஞ்சி ஒடுங்குவர்.
“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
 சுட்டாலும் வெண்மை தரும்.” ~ வாக்குண்டாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக