திங்கள், 30 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 445

திருக்குறள் – சிறப்புரை : 445
சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.௪௪௫
ஆராய்ந்த கல்வியறிவால் அறிவுரை வழங்கும் சான்றோர்கள் மன்னனுக்குக்  கண் எனத் தக்கவர், அத்தகையோரைப் போற்றித் துணையாகக் கொள்ளல் வேண்டும்.
“ இசையும் எனினும் இசையாது எனினும்
வசை தீர எண்ணுவர் சான்றோர் …” – நாலடியார்.

 சான்றோர், தம்மால் முடியும் என்றாலும் முடியாது என்றாலும் எப்பொழுதும் குற்றமற்ற செயல்களையே செய்ய எண்ணுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக