புதன், 11 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 431

குற்றங்கடிதல்
திருக்குறள் – சிறப்புரை : 431
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. ~
தன்முனைப்பும் வெகுளியும் கீழ்மைக்குணமும் ஆகிய குற்றங்கள் இல்லாதவர்களுடைய செல்வம் பெருமிதம் கொள்ளும் சிறப்புடைத்தாம்.
“பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடு இன்று பெருகிய திருவின்
பாடுஇல் மன்னரைப் பாடன்மார் எமரே” ~ புறநானூறு.375.

பலவாறு எடுத்துக்கூறினாலும் சிறிதளவாயினும் உணரும் உணர்ச்சி இல்லாத பெருஞ் செல்வத்தைப் பெற்றுள்ள பெருமை இல்லாத மன்னர்களைப் புலவர்கள் பாடாதிருப்பாராக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக