வியாழன், 12 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 432

திருக்குறள் – சிறப்புரை : 432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.~
கொடை வழங்காத சிறுமையும் போற்றத்தகாத மான உணர்ச்சியும் விரும்பத்தகாத மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றங்களாகும்.

“கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்
 கொல் சின வேந்தன் அவை காட்டும்…. ~ பழமொழி

பகைவரைக் கொன்றொழிக்கும் ஆற்றல் வாய்ந்த அரசனது கல்வியின் பெருமையும் சொல் வன்மையும் அவன் வீற்றிருக்கும் அவையே காட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக