திங்கள், 23 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 438

திருக்குறள் – சிறப்புரை : 438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதுஒன்று அன்று.
ஈத்துவக்கும் இன்பம் அறியாது பொருளைச் சேர்த்து வைத்துக் காக்கும் தன்மையானது குற்றங்களுள் ஒன்றாக எண்ணத்தக்கதன்று, அது மிகக் கொடிய குற்றமாகும்.
“ செல்வத்துப் பயனே ஈதல்
 துய்ப்பேம் எனினே தப்புந பலவே” – புறநானூறு.

பெற்ற செல்வத்தால் பெறும் பயனாவது, பிறர்க்குக் கொடுத்தல் ஆகும், அதனை விடுத்துத் தாமே துய்ப்போம் என்று கருதினால் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் இம்மைப் பயன்கள் கிடைக்காது வருந்த நேரிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக