புதன், 1 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 447

திருக்குறள் – சிறப்புரை : 447
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர். --- ௪௪௭
இடித்துரைத்க்கும் ஆற்றல் வாய்ந்த சான்றோரைத் தமக்குத் துணையாகக் கொள்வாரைக் கெடுக்கும் ஆற்றல் உடையவர் யாவர் உளர்..? ஒருவரும் இல்லை என்பதாம்.
“ ஆற்றப் பெரியார் பகை வேண்டிக் கொள்ளற்க.” – பழமொழி.
வலிமையால் தருக்கி, சான்றோரைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல் இருப்பாயாக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக