செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :466

திருக்குறள் – சிறப்புரை :466
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். ---- ௪௬௬
ஒருவன் செய்யத் தகாதனவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டுவனவற்றைச் செய்யாமல் போனாலும் கெட்டு அழிவான்.
‘நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
 புல்லா விடுதல் இனிது.” ---- இனியவை நாற்பது.

தெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக