புதன், 15 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :460

திருக்குறள் – சிறப்புரை :460
நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல். --- ௪௬௰
நல்லினம் கண்டு நட்புக் கொள்வதைவிடச் சிறந்த துணை வேறு ஒன்றும் இல்லை ; தீய இனத்தின் நட்பைவிடப் பெருந்துன்பம் தருவது வேறு ஒன்றும் இல்லை.
“உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
 பொய் சேண் நீங்கிய வாய் நட்பினை.” …….. மதுரைக் காஞ்சி.

ஒரு பொய் கூறுவதால் உயர்ந்த உலகம் அமிழ்தொடு கிடைத்தாலும் அதனை விட்டொழித்து வாய்மையுடன் நட்புச் செய்தலை உடையவன்… நெடுஞ்செழியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக