ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :451

திருக்குறள் – சிறப்புரை :451
அதிகாரம் : 46 – சிற்றினம் சேராமை
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். --- ௪௫௧
பெருமை உடையவர்கள் சிறுமைக்குணம் கொண்டவர்களோடு சேராது விலகியே இருப்பார்கள் ; அற்பர்களோ அவர்களையே தமது சுற்றமாகக்கொள்வார்கள்.
“ பொய்ப் புலன்கள் ஐந்தும் நோய் புல்லியர்பால் அன்றியே
 மெய்ப் புலவர்தம்பால் விளையாவாம் – துப்பின்
 சுழற்றுங்கொல் கல் தூணைச் சூறாவளி போய்ச்

  சுழற்றும் சிறு புள் துரும்பு.” --- நன்னெறி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக