வியாழன், 16 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :461

திருக்குறள் – சிறப்புரை :461
தெரிந்து செயல்வகை
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். – ௪௬௧
ஒரு செயலைச் செய்வதற்குமுன் அச்செயலைச் செய்வதால் விளையும் அழிவையும் ஆக்கத்தையும் கருத்தில் கொள்வதோடு செயலுக்குரிய ஊதியத்தையும் எண்ணிப்பார்த்து. அச்செயல் செய்யத்தக்கதாயின் செய்க.

”செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத் தரும்…. --- நற்றிணை
தொடங்கிய செயலைச் செய்து முடிக்காது இடையில் நிறுத்திவிடுவது இழிவைத் தருவதோடு அறியாமையையும் வெளிப்படுத்தும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக