புதன், 22 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :467

திருக்குறள் – சிறப்புரை :467
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. --- ௪௬௭
ஒரு செயலைத் செய்யத் தொடங்குமுன் அச்செயலை எவ்வாறெல்லாம் நிறைவேற்றலாம் என்று நன்றாக அலசி ஆராய்ந்து களத்தில் இறங்க வேண்டும், களத்தில் இறங்கிவிட்டு ஐயங்கொண்டு ஆராயமுற்படுவது குற்றமாகும்.
“ நனி அஞ்சத் தக்கவை வந்தக்கால் தங்கண்
 துனி அஞ்சார் செய்வது உணர்வார்….” --- பழமொழி.
செய்யத்தக்கதைச்செய்யும் துணிவு உடையார் அஞ்சத்தக்க வினைகள் எதுவந்தாலும் அஞ்சார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக