வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 449

திருக்குறள் – சிறப்புரை : 449
முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
 சார்பிலார்க்கு இல்லை நிலை. --- ௪௪௯
உழைப்பு என்னும் முதல் இல்லாதவர்களுக்கு ஊதியமில்லை ; அதுபோல் தமக்குத் துணையாக, வழிகாட்டியாக இருந்து காப்பாற்றுவாரைச் சார்ந்திராதவர்களுக்கும் நிலையான வாழ்க்கை இல்லை.
“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு

 இணங்கி இருப்பதுவும் நன்று. --- வாக்குண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக