வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :462

திருக்குறள் – சிறப்புரை :462
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்லை. ---- ௪௬௨
செய்யக் கருதிய செயலைஅறிவிற் சிறந்த சுற்றத்துடன் கலந்தாய்வு செய்வதோடு தானும் நன்கு ஆராய்ந்து செயல்படுவார்க்கு செய்வதற்கு அரிய செயல் என்று எதுவும் இல்லை.
” கற்றது ஒன்று இன்றிவிடினும் கருமத்தை
  அற்றம் முடிப்பான் அறிவுடையான்.” – பழமொழி

சிறிதும் கல்வியறிவு இல்லாவிட்டாலும் செயல் திறனில் சிறந்து. தான் மேற்கொண்ட செயலைச் செய்து முடிப்பான் அறிவு உடையவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக