வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :469

திருக்குறள் – சிறப்புரை :469
நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை. ----- ௪௬௯
பிறர்க்கு நன்மை பயக்கும் செயல்களையும் அவரவர் இயல்பு அறிந்து செய்யாமற் போனால் நன்மையும் தீமையாகும் தவறு  உண்டாகிவிடும்.
“ நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
 கல்மேல் எழுத்துப்போல் காணுமே அல்லாத
 ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
 நீர்மேல் எழுத்திற்கு நேர். ---- வாக்குண்டாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக