திங்கள், 13 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :458

திருக்குறள் – சிறப்புரை :458
மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து. --- ௪௫௮
மனநலம் நன்கு உடைய சான்றோராயினும் அவர்க்கும் நல்ல இனத்தாரின் நட்பு சிறந்த பாதுகாப்பாக அமையும்.
“………… பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டிய திறத்தே.” …… நற்றிணை.

அறிவுடையோர் ஆராய்ந்து பார்த்தே நட்பு கொள்வர் ; நட்பு கொண்டபின்பு ஆராய்ந்து பாரார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக