வியாழன், 23 பிப்ரவரி, 2017

செவ்வியல் பொன்மொழிகள் … 56

செவ்வியல் பொன்மொழிகள் … 56                                                                                              
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே
                      பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், புறநா. 183 : 8 – 10

 கீழோர் மேலோர் என்ற வேறுபாடுள்ள மக்களுள் கீழ்க்குலத் துள் ஒருவன் கற்று வல்லவனாயின் அவனை மேற்குலத்தோரும் போற்றி வழிபடுவர். கல்வி என்றும்  சிறப்புடையது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக