திங்கள், 6 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :452

திருக்குறள் – சிறப்புரை :452
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. --- ௪௫௨
நீர் எவ்வகையான நிலத்தில் வந்து சேர்கிறதோ அந்நிலத்தின் தன்மைக்கேற்ப நீர் வேறுபட்டுத் தோன்றும். அதுபோல் மக்களும் தாம் சேர்ந்த இனத்தின் இயல்புக்கேற்ற அறிவையே பெறுவர்.
“ ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
 மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க…..” – நன்னெறி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக