சனி, 4 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 450

திருக்குறள் – சிறப்புரை : 450
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். ---- ௪௫௰
பலரையும் பகைத்துக்கொள்வதைக் காட்டிலும் பத்துமடங்கு தீமைதருவது பெரியோர்தம் துணையைக் கை நழுவ விட்டுவிடுவது.
“ நல்லார் எனத் தாம் விரும்பிக் கொண்டாரை
 அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்.:” – நாலடியார்,
நல்லவர் என்று கருதி நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒருவர், நல்லவர் அல்லர் எனக் கண்டபோதிலும் குற்றங் குறைகளைப் பெரிது படுத்தாமல் அவரை நண்பராகவே வைத்துக் கொள்ள வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக