சனி, 25 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :470

திருக்குறள் – சிறப்புரை :470
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு. ---- ௪௭௰
தம் செயல் திறனுக்குப் பொருந்தாத எந்த ஒரு செயலையும் செய்வாராயின் உலகம் இகழ்ந்துரைக்கும் ; ஆதலால் பிறரால் இகழ்ந்துரைக்க இடம் தராது சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
மறுமைக்கு வித்து மயல் இன்றிச் செய்து
சிறுமைப் படாதே நீர் வாழ்மின் அறிஞராய் “ – நாலடியார்.

 மறுமையிலும் இன்பம் பெறுவதற்கான செயல்களை, மயக்கமில்லாமல் தெளிவுடன் செய்து, துன்பமின்றி அறிவுள்ளவராய் வாழ முற்படுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக